ரவுடிகளுக்கான எச்சரிக்கை... திருச்சி காவல் ஆணையர் சத்தியப்பிரியா அதிரடி!

 
சத்யப்ரியா

இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. இது ரவுடிகளுக்கான எச்சரிக்கை என்று பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், திருச்சி  மாவட்ட காவல் ஆணையர் சத்யப்ரியா தெரிவித்தார். ரவுடிகள் தப்பி ஓட முயன்றதும், காவலர்கள் மீது தாக்குதல் நிகழ்த்தியதும், பதிலுக்கு போலீசார் ரவுடிகளைச் சுட்டதும் தமிழகம் முழுவதுமே அலர்ட் செய்தது. இது ரவுடிகளுக்கான அலர்ட்டாக பார்க்கப்படுகிறது. சமீபமாக அதிகரித்து வரும் வன்முறைகளும், ரவுடியிஸமும், திருச்சி காவல் ஆணையராக சத்யப்ரியா பொறுப்பேற்றதும் வெகுவாக குறைந்துள்ளதாக சொல்கிறார்கள்.

வன்முறை இல்லாத திருச்சி என்பது தான் இலக்கு. திருச்சியில் ரவுடியிஸம் கூடாவே கூடாது.. மக்களின் பாதுகாப்பு ரொம்ப முக்கியம் என்று போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளாராம் ஆணையர் சத்யப்ரியா. உப்புப்பாறை ரெத்தினம், சந்திரன், ஒத்தக்கை மதி, தாராநல்லூர் கண்ணன், பாலசுப்பிரமணியம், ராஜபந்தா ராஜூ இப்படி பல்வேறு காலங்களில் பல்வேறு ரெளடிகள் திருச்சியை திகிலில் உறையவைத்த சம்பவங்கள் மிகப் பிரபலம். இந்நிலையில் உதவி ஆய்வாளராக என்கவுண்டர் ஸ்பெஷலிட் என்று அறியப்படும் வெள்ளத்துரை ( தற்பொழுது ஏ.டி.எஸ்.பியாக இருக்கிறார் ) உருண்டை ராஜனை உறையூர் சாலை ரோட்டில் வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்தார் அப்பொழுது முதல் திருச்சியில் என்கவுண்டர்கள் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தன, அதன் பின் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு துப்பாக்கி சூடுகள் நடந்த வண்ணம் இருந்தன. 

திருச்சி

திருச்சி மாநகர ஆணையராக ஜே.கே.திரிபாதி பொறுப்பேற்ற காலத்தில் காவல் துறையினருக்கு முழு சுதந்திரம் அளிக்க முட்டை ரவி என்கவுண்டர் செய்யப்பட அதன் பின்னர் தான் ஓரளவிற்கு ரவுடிகளின் அட்டகாசம் ஒழிந்து அமைதி பூங்காவானது திருச்சி. வெள்ளத்துரை வீரப்பன் என்கவுண்டருக்கு மாற்றல் ஆகி செல்ல திரிபாதியும் சென்னைக்கு சென்று விட மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்தது அவர்களின் அஷோசியேட்கள் என அறியப்பட்ட மண்ணச்சநல்லூர் குணா ( தற்பொழுது சிறையில்) செக்போஸ்ட் ஜெயராமன் ( சமத்துவ மக்கள் கட்சி) பட்டறை சுரேஷ் ( ஐ.ஜே.கே) இப்படி ஆளுக்கு ஒரு திசையில் அரசியல் கட்சிகளில் ஆக்கிரமித்துக்கொண்டார்கள்.

திருச்சி

இந்நிலையில் இரண்டாண்டுகளுக்குப் பின் மீண்டும் நேற்று துப்பாக்கி சத்தம் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா. 66 வழக்குகள் இதில் 5 கொலை வழக்குகள். சம்மந்தப்பட்ட ரவுடி துரைசாமி மற்றும் அவனது சகோதரன் ரவுடி சோமசுந்தரம் என்கிற சாமியின் மீது 20 வழக்குகள் மற்றும்  3 கொலை வழக்குகள் உள்ளன.

திருட்டு வழக்கு மற்றும் கஞ்சா கடத்தல் வழக்கு சம்மந்தமாக நேற்றைய முன் தினம் இரவே இருவரையும் காவல்துறை விசாரணைக்கு கொண்டு வந்ததாகவும், அவர்கள் பொருட்களை கொடுத்து வைத்திருந்த அனுராதா என்பவர் வீட்டிற்கு அடையாளம் காட்ட அழைத்துச் செல்லும் வழியில் காவல் துறையினரை தாக்க முற்பட ஜீப் பள்ளத்தில் கவிழ, அதனைத் தொடர்ந்து அவர்கள் பதுக்கி வைத்திருந்த ஆயுதத்தை எடுத்து காவல் துறையினரை தாக்க முற்பட ஆய்வாளர் மோகன் மற்றும் தலைமை காவலர்கள் சிற்றசு,அசோக் ஆகியோர் காயம் அடையவே துப்பாக்கி சூடு நடைபெற்றதாகவும் கூறுகின்றனர் காவல்துறையினர். 

திருச்சி

அமைதியாக இருந்த திருச்சியில் மீண்டும் துப்பாக்கி சூடா அப்பவே அம்மா சொன்னாங்க நாங்க ஆட்சிக்கு வந்தால் ரெளடிகள் அண்டை மாநிலத்திற்கு சென்று விடுவார்கள் தமிழகம் அமைதிப் பூங்காவாக மாறி விடும் என்று. அது உண்மைதான் போல. தீபாவளிக்குத் தானே பட்டாசு சத்தம் கேட்க கூடாது? என்கவுண்டருக்கு கூடவா என காவல் துறையினரிடம் கேட்டால்... இப்ப எங்க சார் நெஞ்சுல முடி உள்ள ஆட்கள் எங்கள் துறைக்கு வருகிறார்கள்? அப்படியே வந்தாலும்...  சரி விடுங்க எனக் கூறி விட்டு நடையைக் கட்டினார்.

நாம் விடைப்பெறுகையில், பக்கத்தில் இருந்த டீ கடையின் ரேடியோவில் இருந்து கிளம்பும் வரையில் பாடிக் கொண்டிருந்தது “சிங்கப் பெண்ணே... சிங்கப் பெண்ணே...” பாடல்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web