உஷார்... இன்று முதல்... தமிழகத்தில் இந்த பகுதிகளில் எல்லாம் மாஸ்க் கட்டாயம்... கவனம் மக்களே...!

 
mask கார் மாஸ்க்

ரொம்ப கவனமாக இருங்க மக்களே... தமிழகத்தில் இன்று முதல் இந்த பகுதிகளில் எல்லாம் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முதல் மாவட்டமாக ராணிப்பேட்டை  மாவட்டத்தில் இன்று முதல் பொது இடங்களில் மாஸ்க் அணிவதை அம்மாவட்ட ஆட்சியர் கட்டாயமாக்கி உத்தரவிட்டுள்ளார். அதே போல், இன்று முதல் நீதிமன்றங்களில் மாஸ்க் அணிந்து செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அரசு மருத்துவமனைகளில் மாஸ்க் அணிந்து செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்புக்கள் அதிகரித்து வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசு தேவையான தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. 

மாஸ்க்

இந்நிலையில், அதன் ஒரு பகுதியாக அரசு மருத்துவமனைகளில் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மாஸ்க்

அதே போன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முதல் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும்  என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு வரும் அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயம். தனிமனித இடைவெளியையும் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, உச்ச நீதிமன்றத்திற்கு வரும் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது. அதே போல் ராணிப்பேட்டை  மாவட்டத்திலும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முக கவசம் அணிவது கட்டாயமாக இல்லாவிட்டாலும், பாதுகாப்பு கருதி, பொது இடங்களுக்கு செல்கையில் முக கவசம் அணிந்து செல்லுங்கள். அதே சமயம் சமூக இடைவெளியையும் கடைப்பிடியுங்க.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web