உஷார்... மக்களே.. ஒரே நாளில் 4,000யைத் தாண்டியது கொரோனா பாதிப்பு!

 
கொரோனா தடுப்பூசிகளை கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்ளலாம்!ஆய்வு முடிவுகள்

மிகுந்த எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருங்க மக்களே... கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4,435 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா இன்னும் விலக வில்லை. அதன் பாதிப்பு உலகம் முழுவதுமே இருந்து கொண்டு தான் இருக்கிறது. தடுப்பூசி போட்டிருந்தாலும் ரொம்பவே கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருங்க. கூட்டமான இடங்களுக்குச் செல்லும் போது முக கவசத்தை தவறாம பயன்படுத்துங்க.

இந்தியாவில் தினசரி பாதிப்பு 4,000யைக் கடந்த நிலையில், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களில் இறப்பவர்களின் எண்ணிக்கையும் மெல்ல மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,435 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,47,33,719 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா

கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,30,911 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 2,508 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் இதுவரை 4,41,79,712 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 23,091 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா

நேற்று ஒரே நாளில் 1,31,086 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 92,21,64,863 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் என ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை 220.66 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web