உஷார்... அடுத்த 4 நாட்களுக்கு மழை... இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

 
கன மழை

கோடை வெயில் இன்னும் துவங்காத நிலையில், தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்து வரும் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

தற்போது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழ்டுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால், இன்று துவங்கி அடுத்து வரும் 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

Rain

குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2 முதல் 5-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Rain

சென்னையில் இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ள வானிலை மையம், மேலும், சென்னையில் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சம் 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாக கூடும் என தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web