மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 43,892 கன அடியாக அதிகரிப்பு!

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகள் நிரம்பிய நிலையில் உள்ளன.இந்நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 43,892 கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 1.27 அடியாகவும் உயர்ந்தது.
கர்நாடக அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீர் கடந்த இரண்டு நாட்களாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.உபரி நீர்வரத்து காரணமாக நேற்று ஜூன் 26ம் தேதி காலை வினாடிக்கு 18,290 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று ஜூன் 27ம் தேதி காலை நீர்வரத்து வினாடிக்கு 43,892 கன அடியாகவும் அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் நேற்று காலை 112.73 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 114 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1.27 அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 84.22 டிஎம்சியாக உள்ளது.மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் காவிரி கரையோரங்களில் முகாமிட்டிருந்த மேட்டூர் அணை மீனவர்கள் தங்களது முகாம்களை மேடான பகுதிக்கு கொண்டு சென்றனர்
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!