திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்... துரை வைகோ !

 
துரை வைகோ

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் மதிமுக போட்டியிட விரும்புவதாக திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வைகோ அழைப்பு

திமுக தலைமையிலான கூட்டணியில் 8 ஆண்டுகளாக உறுதியாக இருந்து வரும் மதிமுக, கட்சியின் அங்கீகாரத்தை மேலும் வலுப்படுத்த, 12 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என தொண்டர்களும், நிர்வாகிகளும் ஆசைப்படுவதாக கூறியுள்ளார். இந்தப் பேட்டி, திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அவரது அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்தபோது நடைபெற்றது.

அப்போது பேசிய அவர் “துரை வைகோ திமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் 12 தொகுதிகளில் போட்டியிட்டால், கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என நினைக்கின்றனர். ஒரு முதன்மைச் செயலாளராக இத்தனை தொகுதிகள் வேண்டும் எனக் கோருவது முதிர்ச்சியற்ற செயலாக இருக்கும். இது குறித்து இயக்கத்தின் தலைமை முடிவெடுக்கும்,” என தெளிவுபடுத்தினார்.

28 வருஷமாச்சு!கொடியேற்றி சந்தோஷப்பட்ட வைகோ !

திமுக கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதால், தொகுதி பங்கீட்டில் நெருக்கடி இருக்கும் எனவும், ஆனால் மதவாதத்தை எதிர்க்கும் பொது நோக்கத்திற்கு பாதகம் வராமல் சமரசம் ஏற்படும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்தக் கருத்துகள், மதிமுகவின் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன. துரை வைகோ, திமுகவுடனான நீண்டகால கூட்டணியை வலியுறுத்தி, “ 8 ஆண்டுகளாக திமுக தலைமையில் உறுதியாக இருக்கிறோம். கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் இணைந்து, மதவாதத்தை எதிர்த்து ஒரணியில் திரண்டுள்ளோம். இந்த ஒற்றுமை, தமிழ்நாட்டின் அரசியல் நிலையில் முக்கிய பங்காற்றும்,” எனக் கூறியுள்ளார். திருச்சி தொகுதியில் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தீப்பெட்டி சின்னத்தில் வெற்றி பெற்ற துரை வைகோ, தொகுதி மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண மத்திய அமைச்சர்களைச் சந்தித்து பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது