சிறுபான்மையினர் உரிமையை பாதுகாக்க போராடுவோம்… த.வெ.க உறுதி!

வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதா மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து எதிர்க் கட்சியினர் பலரும் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதாவிற்கு எதிரான வழக்கில் சட்டப்படி புதிய உறுப்பினர் யாரும் நியமனம் மேற்கொள்ளக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் வக்புத் திருக்க சட்டத்திற்கு எதிராக தமிழக வெற்றிக்கழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் அது குறித்து தமிழக வெற்றி கழகம் தங்களது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
அதில் “தமிழக வெற்றி கழகம் வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கை நேற்று உச்சநீதிமன்றம் கருத்தில் கொண்டு விசாரணை நடத்தியுள்ளது. அந்த மனுவில், மத்திய வக்பு கவுன்சில் மற்றும் வக்பு வாரியங்களில் முஸ்லிம்கள் அல்லாதவர்களை சேர்ப்பது மற்றும் வக்பு சொத்துக்களை மறு வரையறை செய்வதற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை மே 15 ம் தேதி அன்று நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. தமிழக வெற்றி கழகம் இந்த வழக்கில் அரசியல் அமைப்பையும், தகுதியானவர்களின் உரிமைகளின் பாதுகாப்பை முன்னணியாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
உச்சநீதிமன்றத்தில் அரசியல் அமைப்பையும், சிறுபான்மையினரின் உரிமைகளையும் பாதுகாக்க வாதாடிய மூத்த வழக்கறிஞர் டாக்டர் அபிஷேக் மனு சிங்கி அவர்களுக்கும் தமிழக வெற்றி கழக சார்பின் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்” என அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!