இன்னும் 3 நாட்களில் திருமணம்... புதுப்பெண் தூக்குபோட்டு தற்கொலை.. காதலனிடம் விசாரணை!

 
சுஷ்மிதா

திருவாரூர் மாவட்டம் கண்கொடுத்தவனிதம் அருகேயுள்ள நத்தம் கிராமத்தில் சுஷ்மிதா (21) என்ற இளம்பெண் தனது பெற்றோருடன் வசித்த வந்தார். பி.எட். படித்துவந்த இவர் அப்படிப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் மேப்பலம் பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் (27) திருவாரூரில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வருகிறார். ரமேஷ்குமாரும் சுஷ்மிதாவும் காதலித்து வந்துள்ளனர். காதலிக்கும்போதே தனிமையில் உல்லாசமாக இருந்ததால் சுஷ்மிதா கர்ப்பமாகியுள்ளார்.

இதனையடுத்து இரண்டு வீட்டு தரப்பினரும் கலந்து பேசியதையடுத்து சுஷ்மிதா - ரமேஷ்குமார் திருமணம் செய்ய முடிவு செய்தனர். வரும் ஞாயிற்றுக்கிழமை 12ஆம் தேதி இரண்டு வீட்டு தரப்பினரும் இணைந்து திருமணம் நடத்த உள்ளனர்.

சுஷ்மிதா

இதன் தொடர்ச்சியாக நேற்று திருவாரூருக்கு புதிய துணிகள் வாங்குவதற்காக பெற்றோர் சென்றுள்ளனர். சுஷ்மிதா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது சுஷ்மிதா வீட்டின் பின்பக்கம் இருந்த கூரை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.இது குறித்து அக்கம் பக்கத்தினர் பார்த்து கொரடாச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுஷ்மிதாவின் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சுஷ்மிதா

திருமணத்திற்கு நான்கு நாட்களே உள்ள நிலையில் மணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து மாப்பிள்ளை வீட்டாரிடம் வரதட்சணை காரணமாக அல்லது வேறு ஏதும் காரணமா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web