வார விடுமுறை... சுபமுகூர்த்தம்... தமிழகம் முழுவதும் 2,119 சிறப்புப் பேருந்துகள் அறிவிப்பு!

இன்று மே 1 உழைப்பாளர் தினம் விடுமுறை மற்றும் வார கடைசி விடுமுறை, கோடை விடுமுறைகளைக் கணக்கில் கொண்டு தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதி மற்றும் தேவைகளின் அடிப்படையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் உழைப்பாளா் தினம், முகூா்த்தம், வார விடுமுறையையொட்டி 2,119 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “உழைப்பாளா் தினம் (மே 1), முகூா்த்த நாள் (மே 2), வார விடுமுறை (மே 3, 4) விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை மற்றும் பிற இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி உட்பட பல இடங்களுக்கு புதன்கிழமை 565 பேருந்துகளும், வெள்ளி மற்றும் சனிக்கிழமை 375 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
இதுபோல, சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 100 பேருந்துகளும், வெள்ளி மற்றும் சனிக்கிழமை 90 பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மாதவரத்தில் இருந்து மே 3ம் தேதி சனிக்கிழமை வரை 24 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமை (மே 4) சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 715 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 2,119 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!