தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு... முன்பதிவு இன்று துவக்கம்!
தென்மாவட்டங்களை பொறுத்தவரை எப்போதுமே ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கியதுமே முடிந்து விடும். இந்த குறைகளை களையும் வகையில் பண்டிகை காலங்கள், முக்கிய நாட்களில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படுவதுண்டு. அந்த வகையில் தற்போது நெல்லை மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் “ நெல்லை - மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் .இந்த சிறப்பு ரயில் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கும் என மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
மேலும், எர்ணாகுளம்- வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த சிறப்பு ரயில், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சனிக்கிழமைகளில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!