என்ன நடந்தது? அரசுப் பேருந்து டயர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு!

 
டயர்

திட்டக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு நடந்த கோர விபத்தில், சிகிச்சை பலனின்றி மேலும் இருவர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை தற்போது 9 ஆக அதிகரித்துள்ளது. திருச்சியில் இருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்து (SETC), கடலூர் மாவட்டம் எழுத்தூர் என்ற இடத்தில் வந்தபோது அதன் முன்பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரைத் (Median) தகர்த்துக்கொண்டு எதிர் திசையில் பாய்ந்தது. அப்போது சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற இரண்டு கார்கள் மீது பேருந்து நேரடியாக மோதியது. கார்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்ததில், அதில் பயணித்த 7 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

டயர்

விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மேலும் 2 பேர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. மீட்புப் பணி: காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் கிரேன் உதவியுடன் உருக்குலைந்த கார்களை அகற்றி, இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.

டய

விபத்து காரணமாக சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாகப் பாதிக்கப்பட்டிருந்த சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைப் போக்குவரத்து தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது. பேருந்து பராமரிப்பில் குறைபாடு இருந்ததா அல்லது டயரின் தரம் குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்தவர்கள் இந்த விபத்தில் சிக்கியிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!