அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? சிகிச்சைகள் குறித்து மருத்துவமனை அறிக்கை!
85 வயதாகும் மூத்த அமைச்சர் துரைமுருகன், வழக்கமான மருத்துவப் பரிசோதனை மற்றும் சிறு உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் துரைமுருகனுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு இருந்துள்ளது. வயது மூப்பு காரணமாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் அவர் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சருக்குக் காய்ச்சலுக்கான மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. வழக்கமான ரத்தப் பரிசோதனை மற்றும் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் கவலைப்படும்படியான பாதிப்புகள் ஏதுமில்லை எனத் தெரிகிறது. மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று அமைச்சரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அமைச்சரின் மகனும், எம்.பி-யுமான கதிர் ஆனந்த் மற்றும் குடும்பத்தினர் அவருடன் உள்ளனர். தொண்டர்கள் மற்றும் அமைச்சர்கள் யாரும் மருத்துவமனைக்கு வர வேண்டாம் எனத் தலைமை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அமைச்சர் இன்னும் ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். காய்ச்சல் முழுமையாகக் குறைந்த பிறகு, ஒரு சில நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
