வாட்ஸ்அப் குரூப் அட்மின்களுக்கு செக்... வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை ...தேர்தல் ஆணையம் உத்தரவு!
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சமூக வலைதளங்கள் வாயிலாகப் போலிச் செய்திகள் மற்றும் வதந்திகள் பரவுவதைத் தடுக்கத் தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக, வாட்ஸ்அப் குரூப்களில் பகிரப்படும் சர்ச்சைக்குரிய பதிவுகள், மத உணர்வுகளைத் தூண்டும் கருத்துக்கள் மற்றும் தேர்தல் விதிமுறைகளை மீறும் தகவல்களுக்கு அந்தந்த குரூப் அட்மின்களே முழுப் பொறுப்பேற்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. இதைக் கண்காணிக்க மாவட்ட வாரியாகச் சிறப்புச் சமூக வலைதளக் கண்காணிப்புப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், வேட்பாளர்கள் குறித்த அவதூறு பரப்பினாலோ அல்லது வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்வது குறித்துத் தவறான தகவல்களைப் பரப்பினாலோ குரூப் அட்மின்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். குரூப்பில் உறுப்பினர்கள் யாராவது தவறான பதிவுகளைத் தொடர்ந்து பதிவிட்டால், அவர்களை உடனடியாக நீக்க வேண்டும் அல்லது அட்மின் மட்டும் மெசேஜ் செய்யும் வகையில் (Admin Only) அமைப்புகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போலிச் செய்திகள் மற்றும் தேவையற்ற அரசியல் விவாதங்களைத் தவிர்க்கக் குரூப் அட்மின்கள் தங்களின் உறுப்பினர்களுக்குத் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. வதந்திகளைப் பரப்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது ஐடி சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை பாயும் என்பதால், பொதுமக்கள் எவ்விதத் தகவலையும் உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி உத்தரவால் சமூக வலைதளங்களில் அரசியல் கருத்துக்களைப் பதிவிடுவோர் மத்தியில் தற்போது கூடுதல் கவனம் ஏற்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
