அட்சய திருதியை எப்போது? தங்கம் வாங்க நல்ல நேரம்... என்னவெல்லாம் செய்யலாம்.. செய்யக்கூடாது? முழு தகவல்கள்!
அட... அட்சய திருதியை நாளில் தங்கம் கட்டாயம் வாங்க வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. மணிக்கணக்கில் கடை வாசலில் இருக்கிற கூட்டத்தோடு நீங்களும் போய் நிற்காதீங்க. தீபாவளியன்று காலை கறிக்கடையில நிற்கிற கூட்டம் மாதிரி, அட்சய திரிதியையன்று நகைக்கடைகளில் கூட்டம் கூடுகிறது.
இதெல்லாமே நகை வியாபாரிகளின் வியாபார தந்திரம். சிறுவயதில், அட்சய திரிதியை என ஒரு நாள் இருப்பதாவது நமக்கு தெரியுமா? இது தங்கத்திற்கான நாள் கிடையாது. இன்றைய நாளில் புதிதாக எதைத் தொடங்கினாலும் அது மேலும் பெருகும் என்பது நம்பிக்கை. ஆன்மிக ரீதியாக சொல்ல வேண்டுமெனில், இந்த நாளில் விரதம் இருந்து கடவுள் வழிபாடு செய்து பேறு பெற்றவர்கள் பலர்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தையடுத்த மூன்றாவது நாள் திருதியை திதி அனுசரிக்கப்படுகிறது. ஆனால் சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை திருதியை தினத்தில் தான் அட்சய திருதியை அனுசரிக்கப்படுகிறது. இதே நாளில் தான் திருமால் மகாலட்சுமிக்கு தம் மார்பில் நித்திய வாசம் செய்ய இடமளித்தார். அத்துடன் இதே நாளில்தான் செல்வத்தின் அதிபதிகளான ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி என எட்டு லட்சுமிகளும் அஷ்ட லட்சுமிகளும் தோன்றிய தினம். இந்நன்னாளில் பொன், பொருள் வாங்கினால் அது மேலும் மேலும் வளர்ந்து செழிக்கும்.

அட்சயம் என்பது அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம்.இந்த நாளில் தங்கம் வெள்ளி தான் வாங்க வேண்டும் என்பதில்லை. எந்த மங்களகரமான பொருள் வாங்கினாலும் பெருகும். அஷ்ட லட்சுமிகளின் கடாட்ஷமும் கிடைக்கும். அட்ஷய திருதியை அன்று தானியங்கள், உப்பு, மஞ்சள், விளக்கு, வெண்கல மணி, லட்சுமி படம், பணம், குங்குமச்சிமிழ், சந்தனம், சர்க்கரை என எது வேண்டுமானாலும் வாங்கலாம்.
தங்கம் குருவையும், வெள்ளி சுக்கிரனையும் குறிக்கும். இவர்களின் அருள் நீடித்தால் வீட்டில் செல்வம் பல்கி பெருகும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை.அட்சய திருதியை நடப்பாண்டை பொறுத்தவரை இன்றைய ஆண்டு மே 10 ம் தேதி அதிகாலை 4.17 மணி முதல் மறுநாள் மே 11ம் தேதி அதிகாலை 2.50 மணி வரை தொடர்கிறது. அட்சய திருதியை நாளில் சுப முகூர்த்தம் காலை 5.33 முதல் 7.14 வரை இருக்கும் என ஜோதிட நிபுணர்கள் கணித்துள்ளனர். அமிர்த முகூர்த்தம் காலை 8:56 முதல் 10:37 வரையும் பிற்பகல் 12.18 மணி முதல் 1.59 மணி வரையும் சுபமுகூர்த்தம் உள்ளன. அதேபோல், மாலை 5.21 மணி முதல் இரவு 7.02 மணி வரை சுபமுகூர்த்தம் நிறைந்துள்ளது. இந்த நேரங்களில் தங்கம்,வெள்ளி, உப்பு, அவல் வெண்மை நிறப் பொருட்களை வாங்கலாம்.
அட்சய திருதியை என்பது வாங்குவதற்கு மட்டுமல்ல, தானம் செய்வதற்கும் சிறந்த நாள். ஏழை , எளிய மக்களுக்கு நம்மால் இயன்றவரை இந்நாளில் தானம் செய்திட சுபிட்சமான வாழ்வு அமையும் என்பது ஐதிகம். செல்வத்தை அள்ளித்தரும் இந்த நன்னாளில் தானங்கள் செய்பவர்களுக்கு புண்ணியம் பல மடங்கு பெருகும்.
என்னென்ன தானம் வழங்கினால் என்னென்ன பலன்கள்?!
தண்ணீரை தானமாக வழங்கினால் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும். ஐந்தறிவு ஜீவராசிகளுக்கு தண்ணீர் கொடுத்து தாகம் போக்கினால் இறையருளை பெறலாம்.
குங்குமத்தை தானமாக வழங்கினால் கணவருக்கு நீண்ட ஆயுள் கிட்டும்.
மஞ்சளை தானமாக வழங்கினால் தீர்க்க சுமங்கலி யோகம் பெறலாம்.
வெல்லம், நெய், உப்பு இவைகளை தானமாக வழங்கினால் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
புத்தாடைகள் தானமாக கொடுத்தால் இறைவனின் ஆசியை பெறலாம்.
பால், தயிர் தானமாக வழங்கினால் செல்வ செழிப்பை பெறலாம்.
சந்தனத்தை தானமாக வழங்கினால் ஆரோக்கியமான வாழ்வை பெறலாம். இந்நாளில் குலதெய்வத்தை பிரார்த்தனைச் செய்து, இஷ்ட தெய்வத்தை வணங்கி இயன்ற அளவு தானம் செய்திட வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
