‘ஜனநாயகன்’ எப்போ ரிலீஸ்... சென்சார் வழக்கில் இன்று காலை தீர்ப்பு!

 
ஜனநாயகன்

பட்ட காலிலேயே படும் என்று விஜய்யைப் பார்த்து திரையுலகில் நகைத்தாலும், காய்ந்த மரம் தான் கல்லடி படும் என்று ரசிகர்கள் அலட்டிக் கொள்ளாமல் இருக்கின்றனர். ஆனால் சென்சார் பிரச்சனைக்கு இப்போதும் ஆளும் திமுக அரசின் அழுத்தம் தான் காரணம் என்று விஜய் ரசிகர்களிடையே பரவி வருகிறது.

சென்சார் பிரச்சனையில் மிருகங்களை வைத்து படம்பிடித்திருப்பது, வதைப்பது போன்ற படங்கள் தான் இத்தகைய சிக்கல்களை இதுநாள் வரையில் சந்தித்து வந்துள்ளன. இந்நிலையில், நடிகர் விஜயின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு சென்சார் சான்று வழங்கக் கோரிய வழக்கில் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்துள்ள நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

ஜனநாயகன்

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படம், அவர் அரசியலுக்கு நுழைந்த பிறகு வெளியாகும் கடைசி படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படத்தில் இடம்பெறும் அரசியல் வசனங்கள் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன. பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, டிக்கெட் முன்பதிவுகளும் வேகமாக நடைபெற்றன.

ஜனநாயகன்

ஆனால் இதுவரை படத்திற்கு சென்சார் சான்று கிடைக்கவில்லை. இதனால் தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் புரொடக்சன்ஸ் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது. பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்களை செய்த பின்னரும், மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள் உள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் சென்சார் சான்று வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நீதிபதி பி.டி.ஆஷா வழங்கும் தீர்ப்பு படத்தின் வெளியீட்டை தீர்மானிக்க உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!