“எங்கடா உங்க மந்திரி?” திரைப்பட போஸ்டரால் ‘வில்லங்கம்’... கரூரில் பரபரப்பு!

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்து, மீண்டும் அமைச்சரானார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜாமீன் வேண்டுமா ?, பதவி வேண்டுமா ? என கேள்வி எழுப்பியது. இதையடுத்து, அமைச்சர் பதவியை ஏப்.28ம் தேதி செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், கரூர் - திண்டுக்கல் சாலையில் உள்ள திரையரங்கம் ஒன்றில், தெலுங்கு டப்பிங் படமான ‘எங்கடா உங்க மந்திரி’ என்ற திரைப்படம் நேற்று முன்தினம் திரையிடப்பட்டது. இந்தப் படத்தின் சுவரொட்டிகள், திரையரங்கம் உட்பட பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டன. அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்த நிலையில், இந்தச் சுவரொட்டிகள் சமூக வலைதளங்களில் பரவியது.
இதையடுத்து, திரையரங்கில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியில், படத்தின் தலைப்பை வெள்ளைத் தாளைக் கொண்டு திரையரங்க நிர்வாகத்தினர் ஒட்டி மறைத்தனர். ஆனால், சுவரொட்டியில் படத்தின் தலைப்பு மறைக்கப்பட்ட புகைப்படமும் சமூக வலை தளத்தில் நேற்று வேகமாக பரவியது. அதேவேளையில், திரைப்படம் வழக்கம் போல திரையிடப்பட்டது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!