தந்தை - மகன் கொலை வழக்கு விசாரணையில் ஏன் தாமதம்? உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. விளக்கம்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டு விசாரணைக்கு போலீசார் அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.
இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. அப்போதைய சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. பெண் போலீசார் ரேவதி, பியூலா உள்பட பல்வேறு முக்கிய சாட்சிகள் தங்களது சாட்சியங்களை பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சக்திவேல் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சாத்தான்குளம் வழக்கு விசாரணை தாமதமாவது ஏன்? என கேள்வி எழுப்பினார். அதற்கு சி.பி.ஐ. வக்கீல் ஆஜராகி, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் நீதிபதி பணியிடம் காலியாக உள்ளது. எனவே பொறுப்பு நீதிபதிதான் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்.
இந்த வழக்கில் கைதான போலீசார் சார்பில் ஒவ்வொரு சாட்சியும் தனித்தனியாக விசாரிக்கப்படுகின்றனர். மனுதாரர் கூட இந்த வழக்கின் சாட்சிகளை நேரடியாக விசாரித்து வருகிறார். இதன் காரணமாக விசாரணை தாமதமாகி வருகிறது. இந்த வழக்கு விசரணையை 2 மாதத்தில் முடிக்க மதுரை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டு உள்ளது என தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இதுகுறித்து சி.பி.ஐ. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!