பெண்களே உஷார்... விதவைகள் தான் டார்கெட்டே... 16 லட்சம் மோசடி புகார்!

 
சிறை

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில்  48 வயதான பெண் அதிர்ச்சி தரும் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவரது  கணவன் இறந்து விட்டதால், மகளின் திருமணத்திற்கு பிறகு, தனியாக வசித்து வந்துள்ளார்.  மகளின் ஆலோசனைப்படி, திருமணத்தளத்தில் திருமணத்திற்காக பதிவு செய்துள்ளார். இந்த தளத்தில் 51 வயதான பிரமோத் நாயக்  தனது மனைவி மற்றும் குழந்தைகள் கோவிட் 19 காலத்தில் இறந்துவிட்டதாக கூறினார். அவரிடம்  நெருக்கமாக பழகி,  2024 டிசம்பரில்  இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

நகை பணம்

அதன் பின்  ஜனவரி மாதம் 2025ல் பிரமோத், அப்பெண்ணின் தங்க நகைகளை எல்லாம் திருடி சென்றுவிட்டதாக தெரிகிறது.  அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி காவல் துறையினர் தனிக்குழு அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அந்த விசாரணையில் பிரமோத் புனேவில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தனிப்படை அமைத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அதன் பின் நடத்தப்பட்ட விசாரணையில், திருடிய நகைகளை விற்க புனே சென்றதாக கூறினார். உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து, திருடிய ரூ.16 லட்சம் மதிப்புள்ள நகைகளை மீட்டு, பிரமோத்தை கைது செய்து மும்பைக்கு அழைத்து வந்தனர்.

உத்தரபிரதேச போலீஸ்

அவரிடம் நடத்தப்பட்ட  விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதில் பிரமோத் கடந்த 3 ஆண்டுகளாக தனது மனைவி விட்டு பிரிந்து இருந்துள்ளார் எனவும்  திருமணம் செய்துக்கொள்ள இருந்ததாகவும், அவர் விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்ற பெண்களை குறி வைத்து திருமணத்தளத்தில் கணக்கை உருவாக்கி இருப்பதாகவும்  தெரியவந்தது. அவர் குறைந்தது 3 முதல் 4 பெண்களிடம் இதே போன்று மோசடி செய்ததை ஒப்புக் கொண்டார்.  பிரமோத்தின் மோசடிகள் முழுமையாக வெளிச்சத்துக்கு வரும் வரை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?