நேபாள் பிரதமரின் மனைவி காலமானார்!! தலைவர்கள் இரங்கல்!!
நேபாள நாட்டு பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசண்டா. இவரது மனைவி சீதா தஹால். இவர் நீண்ட காலமாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் காத்மண்டு நகரில் உள்ள நார்விச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.
பார்கின்சன் வகையிலான ஒரு சிக்கலான வியாதியால் நீண்டகாலம் அவதிப்பட்டு வந்துள்ளார். சூப்பர் நியூக்ளியர் வாத நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது . இது ஒரு வகையான அரிய நரம்பியல் கோளாறு .
இந்நிலையில், இன்று காலை 8.33 மணிக்கு சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் அவர் காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு நாட்டு தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!