காதல் திருமணம்... பெற்றோருடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி!
உத்திரப்பிரதேசம், எட்டவாஹ் மாவட்டம் பவுப்போரா பகுதியில் வசித்து வந்த ஜிதேந்திர குமார் (33) மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றினார். கடந்த 2025 நவம்பரில் பள்ளிப்பருவ காதலியின் உடன் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து வாழ்ந்த இவர், ஜனவரி 26, 2026 அன்று வீட்டில் மர்ம முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

நிகழ்விடம் சென்ற காவல்துறை ஜிதேந்திர குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி விசாரணை தொடங்கியது. ஜோதியிடம் நடந்த விசாரணையில் பதில்களில் முரண்கள் இருந்ததால், பிரேத பரிசோதனையில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று உறுதி செய்யப்பட்டது.

இதன்போது, விசாரணையில் ஜோதியின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் சம்பந்தப்பட்டதாக தெரியவந்தது. ஜிதேந்திரன் சூதாட்டத்தில் ஈடுபட்டு தனது சம்பாத்தியத்தை முதலீடு செய்தது, இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அம்பலமான கொலையில் ஜோதியும், அவரது குடும்பத்தினரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
