மனைவியின் கள்ளக்காதலால் விபரீதம்... 3 பேரைக் கொலைச் செய்த கணவர்!
ராணிப்பேட்டை மாவட்டம் கொடைக்கல் அருகே உள்ள புது குடியானூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலு. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புவனேஸ்வரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு சஷ்மிதா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் பாலுவின் உறவினரான எதிர் வீட்டில் வசிக்கும் விஜய் என்ற வாலிபருடன் புவனேஸ்வரிக்கு தகாத உறவு இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த தகாத உறவு காரணமாக புவனேஸ்வரி தனது கணவனை பிரிந்து வாலாஜா கீழ் புதுப்பேட்டையில் உள்ள தாய் வீட்டில் 9 மாதங்களாக வசித்து வருகிறார்.
இதற்கிடையே புவனேஸ்வரி 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தெரிந்து பாலு ஆத்திரத்தில் நேற்றிரவு கீழ் புதுப்பேட்டை சென்று புவனேஸ்வரியை வெட்ட முயற்சித்துள்ளார்.
வீட்டிலிருந்த அவரது தாய், புவனேஸ்வரியை வீட்டை விட்டு தப்பித்து வெளியே ஓடி விடுமாறு சொல்லி கேட்டை சாத்தியுள்ளார். மனைவியை தப்பிக்க விட்ட ஆத்திரத்தில் மாமியார் பார்வதியை பாலு கத்தியால் வெட்டி கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து பைக்கில் புது குடியானூர் சென்றவர், ஆத்திரத்தில் விஜயின் தந்தை அண்ணாமலை, தாய் ராஜேஸ்வரி ஆகியோரை இரும்பு ராடால் அடித்து கொலை செய்துள்ளார். 3 பேரை கொலை செய்த பாலுவை கொண்டபாளையம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
