மனைவியின் அந்தரங்க வீடியோவை வைரலாக்கிய கணவர்.. கன்னியாகுமரியில் அதிர்ச்சி!

 
சதீஷ் பெருமாள்

தாலி கட்டி, குடும்பம் நடத்திய மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மனைவியின் அந்தரங்க வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி, அந்த வீடியோக்களை வைரலாக்கி சந்தோஷப்பட்டு அதிர செய்திருக்கிறார் கன்னியாகுமரியைச் சேர்ந்த கணவர்.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் பெருமாள் (34). இவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது. சதீஷ் பெருமாள் கன்னியாகுமரி மாவட்டத்திலேயே மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகள் உண்டு. இந்நிலையில், சதீஷ் பெருமாளுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், இருவரும் சுமூகமாக பேசி, விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது மகள், தாயுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

பெண்

இந்நிலையில், திருமண உறவின் போது இருவரும் தனிமையில் இருந்த ஆபாச வீடியோக்களையும், மனைவியின் அந்தரங்க புகைப்படங்களையும் தனது செல்போனில் வைத்திருந்த சதீஷ் பெருமாள், அவற்றை இணையத்தில் பதிவேற்றி, மனைவியின் தோழிகளுக்கும், உறவினர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார். 

இந்த வீடியோக்களைப் பார்த்த அவரின் மனைவி பெரும் அதிர்ச்சி அடைந்து, சதீஷ் பெருமாளின் இந்த செயல் குறித்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். பின்னர் இது குறித்து விசாரணை நடத்திய சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ் பெருமாளை கைது செய்தனர்.  

பெண்

விசாரணையில், என்னுடன் வாழாமல் போனவள், மானத்துடன் வாழ கூடாது என்று நினைத்து இவ்வாறு ஆபாச வீடியோவை பதிவேற்றம் செய்ததாக, சதீஷ் பெருமாள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறினர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web