பகீர் வீடியோ... காட்டு யானை வனத்துறை வாகனத்தில் ஆவேசத் தாக்குதல்!

நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதியில் இரவு நேரங்களில் வனத்துறையினர் ரோந்து வருவது வழக்கம். அந்த வகையில் இர கூடலூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட ஓவேலி சரகத்தில் காட்டு யானைகள் வனத்திலிருந்து பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் நுழைகிறது. இதனால் வனத்துறையினர் இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவது வழக்கம்.
காட்டு யானை வனத்துறை வாகனத்தில் ை ஆவேசத் தாக்குதல்! pic.twitter.com/yt9IXTvHFn
— Dina Maalai (@DinaMaalai) July 3, 2025
இந்த நிலையில் இரவில் காட்டு யானை ஒன்று ஊருக்குள் நுழைந்துள்ளது அறிந்த வனத்துறையினர் வாகனத்தில் சென்று விரட்டினர். அப்போது சாலையில் ஓடியவாறு சென்ற காட்டு யானை திடீரென ஆவேசம் அடைந்து திரும்பி வந்து வனத்துறையினர் வாகனத்தை தாக்கியது. இதில் வாகனத்தின் முன்பக்க கண்ணாடி மற்றும் பேனட் சேதமடைந்தது.
இதைத் தொடர்ந்து வன ஊழியர்கள் சத்தம் எழுப்பியதால் காட்டு யானை அங்கிருந்து வேகமாக சென்றது. இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது. இது குறித்து வனத்துறையினர் தரப்பில் கேட்டபோது, வன ஊழியர்கள் யாரும் காயம் அடையவில்லை. இது 3 வாரங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் என தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!