பேனர் கிழிப்பு விவகாரம்... தவெக, திமுகவினர் கோஷ்டி மோதலில் இருவர் படுகாயம்!

தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் இன்று விமரிசையாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி ரிஷிவந்தியம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கெடிலம் கூட்ரோடு பகுதியில் தவெக நிர்வாகிகள் ஜெயமனி(31), சரவணன் (38), செந்தில்முருகன்(38) ஆகியோர் பேனர் வைத்திருந்தனர். அதே இடத்தில் திமுகவினர் பேனர் வைக்கக் கூடாது என கூறி எச்சரிக்கிறதாக சொல்லப்படுகிறது.
அதனையும் மீறி தவெக நிர்வாகிகள் அப்பகுதியில் பேனர் வைத்துள்ளனர். நள்ளிரவில் அவர்கள் வைத்த அந்த பேனரை திமுக-வினர் கிழித்தாக சொல்லப்படுகிறது. இதனால் திமுக மற்றும் த.வெ.கவினரிடையே நள்ளிரவில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் திமுகவைச் சேர்ந்த உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ராஜவேல் மற்றும் அவருடன் வந்த நபர்கள் சேர்ந்து இவர்கள் மீது நடத்திய தாக்குதலில் சரவணன் மற்றும் ஜெயமனி ஆகியோரின் மண்டை உடைந்தது.
இருவரும் இரத்த காயங்களுடன் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் நள்ளிரவில் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!