சூட்கேஸில் காங்கிரஸ் பெண் தொண்டரின் சடலம்... கொலை வழக்கில் ஒருவர் கைது!

ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் பெண் தொண்டர் கொலைச் செய்யப்பட்டு சூட்கேஸில் சடலம் அடைக்கப்பட்ட வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை நடத்தியது. இந்நிலையில் இவ்வழக்கில் ஒருவரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஹரியாணா காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “நாங்கள் ஒரு குற்றவாளியை கைது செய்துள்ளோம். மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன” என்று தெரிவித்தார்.
இதனிடையே கொலையாளிகள் கைது செய்யப்படும் வரை கொலைச் செய்யப்பட்ட நர்வாலின் உடலை தகனம் செய்ய அவரது குடும்பத்தினர் மறுத்து விட்டனர்.
நர்வால் ரோஹ்தக்கில் உள்ள விஜய் நகரில் வசித்து வந்தார். காங்கிரஸ் தொண்டரான ஹிமானி நர்வால் ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ நடைப்பயணத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
ரோஹ்தக்கில் செய்தியாளர்களிடம் பேசிய நர்வாலின் தாயார் சவிதா, “என் மகள் கொலையில் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய ஒருவர் சம்பந்தப்பட்டிப்பதாக நாங்கள் கருதுகிறோம். ராகுல் காந்தியுடனான என் மகளின் யாத்திரைக்குப் பின்னர் அவள் மேல் சிலருக்கு வருத்தம் ஏற்பட்டது.
இளம் வயதில் கட்சியில் அவளின் வளர்ச்சி அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்படுத்தியது. என் மகளுக்கு நீதி கிடைக்காத வரை, நாங்கள் அவளது உடலை தகனம் செய்ய மாட்டோம்” என்றார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!