கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலி... பலர் படுகாயம்!

 
மபி
 

 

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் நடந்த நவக்கிரக கோயில் திறப்பு விழா துயரமாக முடிந்தது. தாப்ரா நகரில் புதிதாக கட்டப்பட்ட கோயிலை திறக்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு கலச யாத்திரை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்கள் அதிக அளவில் திரண்டதால் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

யாத்திரையில் கலந்து கொண்ட பெண்களுக்கு புனித கலசம் வழங்கப்பட்டது. கலசத்தை பெற பலர் ஒரே நேரத்தில் முனைந்து சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சிக்கிய 70 வயது மூதாட்டி மூச்சுத்திணறி உயிரிழந்தார். மேலும் ஒரு பெண் மற்றும் சிறுமி உட்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!