திருமணமான 12 நாட்களில் பெண் மருத்துவர் தற்கொலை... கதறும் பெற்றோர்!
திருமணமான 12 நாளிலேயே எம்.பி.பி.எஸ் முடித்து விட்டுப் பெரிய கனவுகளுடன் காத்திருந்த பெண் மருத்துவர் ஒருவர், வேலைக் கிடைக்காத மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் திருப்பூரில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்தவர் ஜீவிதா (25). எம்.பி.பி.எஸ் படித்து முடித்து விட்டு வேலைக்காக காத்திருந்த ஜீவிதா, கோவை தென்னமநல்லூர் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அபிஷேக் (28) என்பவரைக் காதலித்து வந்தார். இவர்கள் காதலை பெற்றோர்கள் ஏற்காத நிலையில், இருவரும் கடந்த ஜனவரி 11ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு இருவரும் மகிழ்ச்சியாக இல்லற வாழ்க்கையைத் தொடங்கி உள்ளனர். இது குறித்து ஜீவிதா தனது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்பு முடித்திருந்தும், தனக்குத் தகுந்த வேலை கிடைக்கவில்லை என்பது ஜீவிதாவுக்குப் பெரும் கவலையாக இருந்து வந்துள்ளது. இது குறித்து அவர் தனது தோழிகள் மற்றும் பெற்றோரிடம் அடிக்கடி கூறி வருத்தப்பட்டுள்ளார். வேலை தேடுவதில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் எதிர்காலம் குறித்த அச்சம் அவரைத் தீவிர மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாகத் தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜீவிதா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
