செங்கோட்டைக்கு உரிமை கோரி பெண் தாக்கல் செய்த மனு தள்ளுபடி... உச்சநீதிமன்றம் உத்தரவு!

 
சுல்தானா
டெல்லியில் உள்ள செங்கோட்டை தனக்கு சொந்தமானது என்று செங்கோட்டைக்கு உரிமை கோரி பெண் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு தகுதியற்றது என்று கூறி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் சுல்தானா பேகம் என்ற பெண் தாக்கல் செய்த மனுவில், "முகலாய பேரரசின் கடைசி மன்னர் பகதூர்ஷா சாபர், கடந்த 1857-ம் ஆண்டு ஆங்கிலேய அரசால் வீழ்த்தப்பட்டார். அவரது சொத்துகள் அனைத்தையும் கிழக்கிந்திய கம்பெனி சட்டவிரோதமாக எடுத்துக் கொண்டது.

செங்கோட்டை

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, முகலாய பேரரசின் கடைசி வாரிசான மிர்சா முகமது பேதர் பக்திற்கு இந்திய உள்துறை அமைச்சகம் 1960ம் ஆண்டு முதல் பென்சன் வழங்க தொடங்கியது. இந்நிலையில் 1980 மே 22ம் தேதி மிர்சா முகமது பேதர் பக்த் காலமானதைத் தொடர்ந்து அவரது மனைவி சுல்தானா பேகத்திற்கு 1980 ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்திய அரசு பென்சன் வழங்கி வருகிறது. அந்த பென்சன் தொகை மிகவும் குறைவான அளவாக இருக்கிறது.

முகலாய வம்சாவளியை சேர்ந்தவரின் மனைவியான தனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய டெல்லி செங்கோட்டையின் உரிமையை இந்திய அரசு தர மறுக்கிறது. இது அடிப்படை உரிமை மட்டுமின்றி அரசியலமைப்பு சட்ட உரிமை 300ஏ மற்றும் மனித உரிமையை மீறும் செயலாகும்" என்று கூறப்பட்டிருந்தது. 

எனவே டெல்லி செங்கோட்டையின் உரிமையை தனக்கு வழங்க இந்திய அரசுக்கு கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி அமர்வு, மிகவும் காலதாமதமாக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டது. இதற்கு மனுதாரர் தரப்பில், அவர் கல்வி அறிவு பெறாதவர் என்பதால் அவரால் சரியான நேரத்தில் நீதிமன்றத்தை நாட முடியவில்லை என்று காரணம் கூறப்பட்டது. ஆனால் அதை ஏற்றுக் கொள்ள  நீதிமன்றம் மறுத்துவிட்டது. தொடர்ந்து அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

செங்கோட்டை

இந்த உத்தரவை எதிர்த்து மனுதாரர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனு டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விபு பக்ரு, நீதிபதி துஷார் ராவ் கடேலா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தனர். காலதாமதத்திற்கு மனுதாரர் தரப்பில் கூறப்பட்ட காரணங்களை ஏற்றுக்கொள்ளாத நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சுல்தானா பேகம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அதில், ஜாபரின் வாரிசு என்ற அடிப்படையில், ஜாபரிடம் இருந்து பறிக்கப்பட்ட டெல்லி செங்கோட்டையை தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரி இருந்தார்.

இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு முன்பு முன்வைக்கப்பட்டது. அப்போது, ''டெல்லி செங்கோட்டையை மட்டும் ஏன் கேட்கிறார்? ஆக்ரா கோட்டை, பதேபூர் சிக்ரி ஆகியவை வேண்டாமா?'' என்று மனுதாரருக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனு விசாரணைக்கு தகுதியற்றது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web