விவசாயம் வளம்பெற மேல்மருவத்தூர் சக்திபீடத்தில் பெண்கள் இளநீர் அபிஷேகம்!

தூத்துக்குடி மாவட்டம் திருவிக நகர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடத்தில் விவசாயம் வளம்பெற பெண்கள் இளநீர் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
மேல்மருவத்தூர் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அருளாசியுடன் தூத்துக்குடி திருவிக நகர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடத்தில் விவசாயம் வளம்பெற ஆயிரக்கணக்கான பெண்கள் இளநீர் அபிஷேகம் செய்து அன்னை ஆதிபராசக்தி அம்மனை வழிபட்டனர்.
விவசாயம் வளம்பெறவும், மக்கள் வளமுடன் வாழவும், தொழில்வளம் சிறக்கவும், தொற்று நோயிலிருந்து மக்களை காக்கவும் வேண்டி பெண்கள் இளநீர் அபிஷேகம் செய்து வழிபட்டனர். அபிஷேக நிகழ்ச்சியை கூட்டுறவு பண்டகசாலை பொதுமேலாளர் கந்தசாமி துவக்கி வைத்தார். தொடர்ந்து அன்னை ஆதிபராசக்திக்கு சக்திபீட பொருளாளர் அனிதா, மகளிர் அணி யசோதா ஆகியோர் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து சிறப்பு தீபாராதனை செய்தனர். அருட்பிரசாதம், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை கோவில்பட்டி ஆதிபராசக்தி மன்ற தலைவர் அப்பாசாமி தொடங்கி வைத்தார்.
விழாவில், இந்தியன் வங்கி மேலாளர் தியாகராஜன், யூகோ வங்கி மேலாளர் பரத்குமார், சக்திபீட துணைத் தலைவர் திருஞானம், தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளர் கோபிநாத், ஆத்தூர் சண்முகசுந்தரி, தளவாய்புரம் ராஜ், அண்ணாநகர் மன்றம் சிவஞானம், பேச்சியம்மாள், சக்திபீட பொறுப்பாளர்கள் வேல்ராஜ், மந்திரம், மகளிர் அணி பொறுப்பாளர்கள் பச்சியம்மாள், செல்வி, அகிலா, முத்துலெட்சுமி, சாந்தி, வீரலெட்சுமி உட்பட ஏராளமான செவ்வாடை பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!