கோவில் திருவிழாவின் போது விபரீதம்.. மின் விளக்கு அலங்காரத்தில் ஈடுபட்டவர் மின்சாரம் தாக்கி பலி..!!
கோயில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...
கன்னியாகுமாரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள புதுக்கடை மேல ஊரைச் சேர்ந்த சொந்தவ் தங்கநாதர். இவரது மகன் ஷைனிங் புரூஸ் (39). பாலாறு, பழவர் கரம்விளை பகுதியில் உள்ள வனதுர்கா கோயில் திருவிழாவையொட்டி மின் விளக்கு அலங்கரிக்கும் பணியில் ஐந்து பேர் வெள்ளிக்கிழமை மாலை ஈடுபட்டிருந்தார்.
இதற்காக அப்பகுதியில் உள்ள இரும்பு டெலிபோன் கம்பத்தில் ஏறும் போது அப்பகுதியில் இருந்த மின் இணைப்பு வயர் டெலிபோன் கம்பத்தில் உராய்ந்து மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். அவரை சக ஊழியர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் மீட்டு குழித்துறை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது அக்கா கனிபியூலா அளித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!