பதறிய பெற்றோர்... விமானத்தில் 3 வயது குழந்தைக்கு தண்ணீருக்கு பதில் மதுவை ஊற்றி கொடுத்த பணிப்பெண்!

ஹாங்காங்கிலிருந்து லண்டனுக்குச் சென்ற கேத்தே பசிபிக் விமானத்தில் பயணம் செய்த 3 வயது குழந்தைக்கு, தண்ணீருக்கு பதிலாக வெள்ளை ஒயின் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
விமானத்தில் பயணம் செய்த குழந்தைக்கு, இரவு உணவு நேரத்தில் தண்ணீர் என நினைத்து, பணிப்பெண்கள் மதுவை பரிமாறிவிட்டனர். இதனை உடனடியாக கவனித்த பெற்றோர் குழந்தை ஒரு சிப் குடித்தவுடன், “இது கசப்பாக இருக்கிறது” எனக் கூறியதால் உண்மை தெரியவந்தது.
விஷயத்தை உணர்ந்த பெற்றோர், உடனே விமான பணிப்பெணிடம் புகார் தெரிவித்துள்ளனர். பின்னர் குழந்தையை விமானத்தில் உள்ள மருத்துவக் குழு பரிசோதித்து, தீவிர பாதிப்பு இல்லை என உறுதிப்படுத்தியது.
முதற்கட்டத்தில் விமான நிறுவனம் இந்த தவறை அலட்சியமாக எடுத்துக்கொண்டதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இருப்பினும், சமூக வலைதளங்களில் சம்பவம் பரவியவுடன், விமான நிறுவனம் நடவடிக்கையில் இறங்கியது.
தவறை ஒப்புக்கொண்ட கேத்தே பசிபிக் நிறுவனம், குழந்தையின் டிக்கெட்டுக்கான பணத்தைத் திருப்பித் தந்துவிட்டது. அத்துடன் கூடுதலாக 3 இலவச வகுப்பு மேம்படுத்தல் வவுச்சர்களை வழங்கும் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
தேவையான மருத்துவச் செலவுகளையும் நிறுவனமே ஏற்கும் என்றும் உறுதி அளித்துள்ளது. இதேபோன்று அலட்சியங்கள், சிறிய தவறாகக் கருதப்பட முடியாது என்பதையும், விமானப் பணியாளர்களின் கவனக்குறைவு குழந்தைகளின் பாதுகாப்பை பாதிக்கக் கூடும் என்பதையும் இச்சம்பவம் தெளிவாக காட்டுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!