தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பில் என்னென்ன வசதிகள்?

 
விஜய்


தமிழ் திரையுலகில் இளையதளபதியாக கொண்டாடப்படும் நடிகர் விஜய்  தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார். ஓராண்டு முடிவடைந்த நிலையில்  தற்போது மாவட்டம் மற்றும் வட்டம் உள்ளிட்ட உட்கட்சி நிர்வாகிகளை நியமித்து 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார். இதுவரை மாநாடு, புத்தக வெளியீட்டு விழா  நிகழ்வுகளில் கலந்து கொண்ட விஜய் முதன் முறையாக  பரந்தூர் பகுதியில் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.  

விஜய்


விஜய் அரசியல் கட்சித் தலைவர் மட்டுமல்லாது திரையுலகில் உச்ச நட்சத்திரம் என்பதால் அவரை காண தவெக தொண்டர்கள் மட்டுமல்ல அவரது ரசிகர்கள்,  பொதுமக்களும் அதிக அளவில் கூடி விடுகின்றனர். இதனால் கூட்டத்தை தவிர்த்து வந்த விஜய் , தனது அரசியல் பயணத்திற்காக அடுத்த மாதம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல இருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இதனால் தற்போது விஜய்க்கு கூடுதல் பாதுகாப்பு  வழங்கப்பட்டுள்ளது.

விஜய்
இதன்படி  தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.  இந்த Y பிரிவு பாதுகாப்பின் படி 4 ஆயுதம் ஏந்திய காவலர்கள் உட்பட 8 முதல் 11 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என கூறப்படுகிறது.
இந்த Y பிரிவு பாதுகாப்பு குழுவில் 2 முதல் 4 சிஆர்பிஎப் வீரர்களும் மற்றவர்கள் மாநில பாதுகாப்பு காவலர்களும் இருப்பார்கள் என கூறப்படுகிறது. இதில் விஜய் எங்கு செல்ல உள்ளார், அவருக்கு அங்கு என்னென்ன பாதுகாப்பு வசதிகள்  என்பதை ஆய்வு செய்து 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.  இந்த பாதுகாப்பு தமிழ்நாட்டிற்க்குள் மட்டுமே  என்பது குறிப்பிடத்தக்கது.  


Y பிரிவு பாதுகாப்பு என்பது மக்கள் மத்தியில் பிரபலமான அரசியல் கட்சி தலைவருக்கோ, உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவுக்கு மிரட்டல்கள் வரும் பட்சத்தில்  அதனை எதிர்கொண்ட சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், பொதுமக்களுக்கோ அல்லது சமூக விரோத கும்பலிடம் இருந்து மிரட்டல் பெற்ற நபர்களுக்கோ மத்திய உள்துறை சார்பில் பாதுகாப்பு வழங்கப்படும்.  
இது தனி நபர் சார்ந்தோ அல்லது கட்சி சார்ந்தோ பாதுகாப்பு கேட்டு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு விண்ணப்பிக்கலாம்.  அதனை அடுத்து, மத்திய குழு நேரில் ஆய்வு செய்து பாதுகாப்பு குறித்து முடிவு செய்யும். அதன் பிறகு பாதுகாப்பு கள நிலவரங்களை ஆய்வு செய்த பிறகு அந்தந்த இடங்களில் பாதுகாவலர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் இறுதி செய்யப்படும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?