தமிழகத்திற்கு கனமழைக்கான 6 நாட்களுக்கு மஞ்சள் அலெர்ட்!
தென்மேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் நிலவி வரும் வும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று நவம்பர் 7ம் தேதி வியாழக்கிழமை தமிழகத்தின் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே நேற்று முன்தினம் வங்கக்கடலில் உருவாக இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தள்ளிப்போனது. இது நாளையோ அல்லது நாளை மறுநாளோ உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடையும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று முதல் 10ம் தேதி வரையிலும், 12, 13 தேதிகளிலும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழைக்கு வாய்ப்பு என்பதால் இந்த 6 நாட்களும் தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
