நேற்றே குவிந்த ‘குடி’மகன்கள்... இன்று முதல் 3 நாட்களுக்கு மதுபான கடைகளுக்கு தொடர் விடுமுறை!

 
மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்!! தடுமாறும் குடிமகன்கள் !!
இன்று பிப்ரவரி 25ம் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு தெலங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளையும், பார்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், ‘குடி’மகன்கள் நேற்று காலை முதலே பல இடங்களிலும் அதிகளவு மதுபாட்டில்களை வாங்கி ஸ்டாக் வைக்க தொடங்கியிருந்ததைக் காண முடிந்தது. 

மதுபானக் கடை

து தெலுங்கானா மாநிலத்தில் சட்ட மேலவைக்கு பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர் தொகுதிகளில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். இதனை முன்னிட்டு  சைபராபாத் போலீஸ் கமிஷனரேட்டில் உள்ள கொல்லூர் மற்றும் ஆர்.சி.புரம் காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட கிளப்புகளில் உள்ள பார்கள் உள்பட உணவகங்களுடன் இணைக்கப்பட்ட ஒயின், கள்ளுக்கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என  சைபராபாத் காவல் துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மதுபானக் கடை

அதன்படி இன்று பிப்ரவரி 25ம் தேதி மாலை 4 மணி முதல் பிப்ரவரி 27ம் தேதி மாலை 4 மணி வரை  தொடர்ந்து 3 நாட்களுக்கு அனைத்து வகையான மதுபானக் கடைகளும் மூடப்படும் என காவல்துறையினர் அறிவித்திருந்தனர். இன்று மாலை முதல் கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று முதலே பல இடங்களிலும் ‘குடி’மகன்கள் பைகளைக் கொண்டு வந்து, பொறுப்பாக அதிகளவிலான மதுபாட்டில்களை வாங்கி ஸ்டாக் வைக்க தொடங்கியிருந்தனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web