எப்ப வேணும்னாலும் அழைப்பு வரலாம்... சேலத்தில் விமானப்படை வீரர்கள் திடீர் பயிற்சி!

 
விமானப்படை வீரர்கள்
தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் விமானப்படை வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். நேற்று முன் தினம் ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தற்போது இருநாட்டு எல்லையிலும் போர் பதற்றம் தொடங்கியுள்ளது. தீவிரவாதிகள் தேடுதல் வேட்டைக்காக எப்போது வேண்டுமானாலும் அழைப்பு வரலாம். இந்நிலையில், கோவை சூலூரிலிருந்து 3 ஹெலிகாப்டரில் வந்து ஒத்திகையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் இந்திய விமானப்படை பயிற்சி தளம் செயல்பட்டு வருகிறது. இங்கு, விமானப்படைக்காக தேர்ந்தெடுக்கப்படும் வீரர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்குள்ள பைஸ்ரன் பள்ளத்தாக்கு பகுதியிலேயே தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது.

விமானப்படை வீரர்கள்
இதையடுத்து, அப்பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதிக்கு வாகனங்கள் எளிதில் செல்ல முடியாது என்பதால், முழுக்க முழுக்க விமானப்படை வீரர்களே தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால், பல்வேறு பகுதியிலிருந்து விமானப்படை வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, கோவை சூலூர் விமானப்படை பயிற்சி மையத்தில் உள்ள வீரர்களும் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

இதற்காக 30 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வழக்கமான பயிற்சி அளிக்கப்பட்டு வந்த நிலையில், மலைப்பாங்கான இடங்களில் ஹெலிகாப்டரில் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபடுவதற்கான பயிற்சியும் தற்போது அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, நேற்று எந்தவித முன்னறிவிப்புமின்றி 3 ஹெலிகாப்டர்களில் 30க்கும் மேற்பட்ட விமானப்படை வீரர்கள் (ஜவான்கள்) சேலம் வந்தனர். அனைவரும் ஒரே நேரத்தில் மல்லூர் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஹெலிபேடு இறங்குதளத்தில் வந்திறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அதிகாரிகள்  ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடைபெற்ற இடத்திற்கு ஹெலிகாப்டர்கள் மூலமாகத்தான் செல்ல முடியும். இதையடுத்து, சூலூரில் உள்ள இந்திய விமானப்படை வீரர்கள் ஹெலிகாப்டரில் வந்து சேலத்தில் பயிற்சி எடுத்து வருகின்றனர்.  தீவிரவாதிகள் தேடுதல் வேட்டைக்காக இவர்களுக்கு எப்போதும் வேண்டுமானாலும் அழைப்பு வர வாய்ப்புள்ள நிலையில், ஒத்திகையில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது என்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web