ஹிஜாப்பை கழற்றல்லன்னா தேர்வு எழுத முடியாது... தேர்வு ஹாலில் ஆசிரியர் கெடுபிடி!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் மொராதாபாத்தில் உள்ள தேர்வு மையத்திற்கு 4 மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதச் சென்றதாக தெரிகிறது. அப்போது, மாணவிகளின் அடையாளங்களை அறிந்துகொள்ள ஹிஜாப்பை கழற்றும்படி ஆசிரியர் கூறியுள்ளார்.
ஹிஜாப்பை கழற்றினால் மட்டுமே தேர்வு எழுத முடியும் எனவும், இல்லையெனில் உள்ளே நுழையக்கூட அனுமதி கொடுக்கப்படாது எனவும் கூறியுள்ளார்.
அதற்கு அந்த மாணவிகள் மறுப்பு தெரிவித்து தேர்வை தவறவிட்டாலும் பரவாயில்லை ஹிஜாப்பை கழற்ற மாட்டோம் என தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து, பெண் ஆசிரியர் ஒருவரின் மூலம், மாணவிகளின் அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதாக மாவட்ட கல்வி அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!