அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு இளம்பெண் தர்ணா!!

 
கலையரசி

 
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா தும்பலம் பெருமாள் பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் 23 வயது   கலையரசி.இவர் 5 வருடங்களுக்கு முன் 29 வயது ராஜசேகரை திருமணம் செய்து கொண்டார்.  கடந்த  3 மாதங்களுக்கு முன்பு வரை சுமூகமாக சென்ற இவர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் வரத்தொடங்கின. ராஜசேகர் கலையரசிக்கு தெரியாமல்  வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

5வது திருமணம்


 தற்போது தான் 2து  திருமணம் குறித்து தகவல் அறிந்த கலையரசி முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் புகார் மீது இதுவரை எவ்வித  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால்   அனைத்து மகளிர் காவல் நிலைய வாசல் முன்பாக அமர்ந்து கணவன் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

போலீஸ்

 
காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் இல்லாத நிலையில் மகளிர் காவல் நிலையத்தில் இருந்த பெண் காவலர்கள் இளம் பெண் தர்ணா போராட்டம் நடத்தியதில்  அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து முசிறியில் உள்ள சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த  உதவி ஆய்வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட கலையரசியை சமாதானப்படுத்தி  விசாரணை நடத்தினர். உடனடியாக  சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதன் பேரில் கலையரசி தர்ணா போராட்டத்தை கைவிட்டார். கணவர் மீது நடவடிக்கை எடுக்காத  கண்டித்து இளம் பெண் காவல் நிலையம் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web