தாவணியால் கை, கால்களைக் கட்டி ஏரியில் நிர்வாணமாக இளம்பெண் வீச்சு... போலீசார் விசாரணை!

 
பெண்

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் கோவிந்த்குண்டு பகுதியில் உள்ள கோவர்தன் ஏரியில் அப்பகுதி மக்கள் குளித்தும், துணிதுவைத்து வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த ஏரியில் அடையாளம் தெரியாத சுமார் 24 வயது பெண்ணின் உடல் மிதந்துள்ளது. இதனை கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

பெண்

இந்த தகவல் அறிந்த பொதுமக்கள் அப்பகுதியில் ஏராளமானோர் குவிந்தனர். தகவல் அறிந்த போலீஸார் பெண்ணின் உடலை மீட்டனர். அப்போது ஏரியில் அரை நிர்வாண நிலையில் இளம்பெண்ணின் உடல் மிதந்தது. பெண்ணின் கைகள் மற்றும் கால்கள் தாவணியால் கட்டப்பட்டிருந்தன. அத்துடன் அவரது முகம் ஜாக்கெட்டால் மூடப்பட்டிருந்தது.  

பெண்

பின்னர் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுவரை அந்த பெண் யார் என்பது குறித்து கண்டறியப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் கூறுகின்றனர்.

இளம்பெண்ணை கொலை செய்து கை, கால்களைக் கட்டி நீரில் வீசியது யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web