பூத் கமிட்டியில் பணியாற்றும் இளைஞர்கள், பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பு... ராஜேந்திர பாலாஜி உறுதி!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஒன்றியம் எரிச்சநத்தம் மற்றும் எம்.புதுப் பட்டி கிராமங்களில் அதிமுக சார்பில் பூத் நிர்வாகிகள் நியமனம் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “திமுக ஆட்சியின் மீது இன்று யாருக்கும் நம்பிக்கை இல்லை, எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கலவரம், போதை புழக்கம் என்ற நிலையில்தான் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அதிமுக ஆட்சியமைய பூத் கமிட்டியில் பணியாற்றும் படித்த இளைஞர்கள், பெண்களுக்கு அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும். அப்படி வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை எனில் என் வீட்டிற்கு வந்து உரிமையோடு நீங்கள் கேட்கலாம்.
எனது வாகனத்தை வழிமறித்து உரிமையோடு கேட்கலாம், கேட்கும் உரிமை உங்களுக்கு உள்ள நிலையில், அதை செய்யும் கடமை எங்களுக்கு உள்ளது. பூத் கமிட்டியில் நம்பிக்கையோடு களப்பணியாற்றுங்கள். உங்கள் குடும்பத்தில் ஒருவராகவும், மூத்த சகோதரராகவும் இருப்பேன்” என கட்சி நிர்வாகிகளிடையே நம்பிக்கை தெரிவித்தார்..
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?
பூத் கமிட்டியில் பணியாற்றும் படித்த இளைஞர்கள், பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பு... ராஜேந்திர பாலாஜி உறுதி!விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஒன்றியம் எரிச்சநத்தம் மற்றும் எம்.புதுப் பட்டி கிராமங்களில் அதிமுக சார்பில் பூத் நிர்வாகிகள் நியமனம் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “திமுக ஆட்சியின் மீது இன்று யாருக்கும் நம்பிக்கை இல்லை, எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கலவரம், போதை புழக்கம் என்ற நிலையில்தான் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அதிமுக ஆட்சியமைய பூத் கமிட்டியில் பணியாற்றும் படித்த இளைஞர்கள், பெண்களுக்கு அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும். அப்படி வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை எனில் என் வீட்டிற்கு வந்து உரிமையோடு நீங்கள் கேட்கலாம்.
எனது வாகனத்தை வழிமறித்து உரிமையோடு கேட்கலாம், கேட்கும் உரிமை உங்களுக்கு உள்ள நிலையில், அதை செய்யும் கடமை எங்களுக்கு உள்ளது. பூத் கமிட்டியில் நம்பிக்கையோடு களப்பணியாற்றுங்கள். உங்கள் குடும்பத்தில் ஒருவராகவும், மூத்த சகோதரராகவும் இருப்பேன்” என கட்சி நிர்வாகிகளிடையே நம்பிக்கை தெரிவித்தார்..
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!