பாம்பை கடித்து துண்டாக்கிய இளைஞர்.. வீடியோ பதிவிட்ட நண்பர்கள்.. கொத்தா தூக்கிய போலீசார்!

 
நவீன மயமாகிவிட்ட

நவீன மயமாகிவிட்ட இன்றைய காலக்கட்டத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக இளைஞர்கள், இளம்பெண்கள் செய்யும் அட்டகாசம் கொஞ்சமில்லை. எங்கு சென்றாலும் புகைப்படம், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு லைக்குகளை பெறுவதில் குறியாக உள்ளனர். சில நேரங்களில் இது பெரும் ஆபத்துகளில் முடிந்துவிடுகிறது. அப்படிதான் இங்கு ஒரு இளைஞர் சிக்கியுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சின்னகையனூர் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் மோகன் (33), சூர்யா (21), சந்தோஷ் (21). இவர்கள் மூவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். 

போலீசார்

இந்நிலையில் கடந்த ஜனவரி 10ஆம் தேதி சின்னகையனூர் ஏரி அருகில் அவர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது மோகனை தண்ணீர் பாம்பு ஒன்று கடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த மோகன் தன்னைக் கடித்த தண்ணீர் பாம்பை கையில் பிடித்து விளையாடியுள்ளார். என்னையே கடித்து விட்டாயா, உன்னை என்ன செய்கிறேன் பார், எனக் கூறியபடியே அதை துண்டு துண்டாக கடித்து மோகன்  துப்பியுள்ளார். இதில் தண்ணீர் பாம்பு இறந்தது.

போலீசார்

இந்த காட்சிகளை அருகில் இருந்த நண்பர்கள் இருவரும் வீடியோ எடுத்து வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக ராணிப்பேட்டை வனத்துறையினர் விசாரணை நடத்தி, சின்னகையனூரில் பதுங்கியிருந்த மோகன், சூர்யா, சந்தோஷ் ஆகியோரை நேற்று கைது செய்தனர். பின்னர் மூவரையும் அரக்கோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web