பெரும் கொடூரம்.. ஆணுறுப்பு துண்டித்து இளைஞர் கொடூர கொலை... போலீசார் விசாரணை!
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் அருகே சந்தப்பேட்டை வனப்பகுதியில் ஆணின் உடல் ஒன்று கிடந்துள்ளது. வனப்பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற நபர், ஆணின் உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து ஏரியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் அங்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, தலை நசுக்கப்பட்டு, பிறப்புறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் சுமார் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது. பின்னர் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தசம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
ஏரியூர் காவல் ஆய்வாளர் யுவராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், பென்னாகரம் காவல்துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
எனினும் இறந்தது யார்?, எந்த பகுதியைச் சார்ந்தவர்?, கொலை செய்யப்பட்டதன் காரணம் என்ன என்ற பல்வேறு கோணத்தில் ஏரியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!