ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை!
May 8, 2025, 16:30 IST

தூத்துக்குடி மாவட்டத்தில் ரயில் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி - மீளவிட்டான் ரயில் நிலையம் இடையே நேற்று மாலை மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லை.
இது குறித்து மீளவிட்டான் கிராம நிர்வாக அலுவலர் மீனாட்சி அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி இருப்புப்பாதை காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து சப் இன்ஸ்பெக்டர் பெருமாள் விசாரணை நடத்தி வருகிறார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web