இளைஞர்களே இங்கேயே மாற்றத்தை உருவாக்குவோம்... இடம்பெயராதீங்க... ராகுல்காந்தி எழுச்சி உரை!

பீஹார் மாநிலத்தில் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் “பலாயன் ரோகோ, நவுக்ரி தோ” என்ற பெயரில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில், கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
இந்தப் பேரணியில் கலந்துகொண்டு அவர் பேசுகையில் ” பிஹார் இளைஞர்கள் வேலை தேடி மற்ற மாநிலங்களுக்கு இடம்பெயர வேண்டிய நிலையை மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இளைஞர்கள் தங்கள் திறமையாலும் உழைப்பாலும் எதையும் சாதிக்கக் கூடியவர்கள். ஆனால், அவர்களுக்கு சரியான வாய்ப்புகள் இல்லாததால், வேலை தேடி டெல்லி, மும்பை, குஜராத் போன்ற பிற மாநிலங்களுக்கு இடம்பெயர வேண்டிய நிலை நீடித்து வருகிறது.
இது பீஹார் மக்களுக்கு மட்டுமல்ல, மாநிலத்தின் பொருளாதாரத்திற்கும் பெரும் பின்னடைவு. இளைஞர்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே வேலை பெறுவதற்கு உரிய கொள்கைகளும் திட்டங்களும் தேவை. இளைஞர்கள் தங்கள் சொந்த மாநிலமான பீஹாரிலேயே வேலைவாய்ப்பைப் பெற வேண்டும். இந்தக் குரல் மாற்றத்தை உருவாக்கும்” எனக் குறிப்பிட்டு பேசியுள்ளார்.
மேலும், இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வெள்ளை சட்டைகள் அணிந்து கலந்து கொண்டனர். பீஹார் மாநிலத்தில் இளைஞர்களின் உணர்வுகளையும், அவர்களது போராட்டங்களையும், கஷ்டங்களையும் உலகிற்கு எடுத்துச் செல்வதே இதன் நோக்கம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது பீஹார் மாநிலத்தில் வேலையின்மை மற்றும் இடம்பெயர்வு பிரச்னைகளுக்கு எதிரான ஒரு முக்கிய அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!