மின்னல் தாக்கிய உயரமான கோபுரம்! 8 லட்சம் வீடுகளில் மின்சாரம் பாதிப்பு!

 
கோபுரம் மின்னல்

செல்போன்கள் வந்து விட்ட பின்னர், உள்ளங்கைக்குள் உலகம் சுருங்கி விட்டது. உலகின் ஏதோவொரு மூலையில் நிகழ்கிற சம்பவங்கள் அடுத்த நொடியே உலகம் முழுவதும் பதைபதைப்பை உருவாக்கி வருகிறது. நேற்று கனடாவில் உள்ள உலகின் மிக உயரமான கோபுரங்களுள் ஒன்றான சி.என் கோபுரத்தை மின்னல் தாக்குகிற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த கோபுரத்தின் மீது மின்னல் தாக்கியதையடுத்து, சுமார் 8 லட்சம் வீடுகளில் மின்சார சப்ளை பாதிக்கப்பட்டது. கி வருகிறது.

கனடாவின் ஒன்டாரியோ மகாணத்தில் உள்ள டொரன்டோ நகரில் உலகின் மிக உயரமான கோபுரங்களில் ஒன்றான சி.என் கோபுரம் அமைந்துள்ளது. இந்த கோபுரம் சுமார் 553.3 மீட்டர் உயரம் கொண்டது. 1973ம் ஆண்டு தொடங்கப்பட்ட இதன் கட்டுமானப் பணிகள் 1976ம் ஆண்டு முடிவடைந்து, அதே ஆண்டு ஜூன் 26ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.


மேற்கு அரைக்கோளத்தில் தனித்த நிலையான கட்டுமானம் கொண்ட உயரமான கோபுரங்களில் 9வது இடத்தில் உள்ளது. டொரன்டோ நகரின் வான்வரையாக இருக்கிறது. இந்த கோபுரத்தைப் பார்ப்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து சுமார் இரண்டு மில்லியன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இங்கு வருகை புரிகின்றனர். 

இதன் பெயரான சி என் என்பது கனாடியன் நேஷனல் (தேசிய கனடா இரயில்வே) எனும் நிறுவன பெயரின் சுருக்கமாகும். 1995-ம் ஆண்டில் அமெரிக்கக் கட்டடப் பொறியாளர்கள் சமூகமானது, சி.என் கோபுரத்தை நவீன உலக அதிசயங்களில் ஒன்றாக அறிவித்தது. இது பெரிய கோபுரங்கள் உலக சம்மேளனத்திற்கு சொந்தமானதாகும்

canada

இந்நிலையில் கடந்த புதன்கிழமை அதிகாலையில் இந்த கோபுரத்தை மின்னல் தாக்கியது. இதனையடுத்து, கனடாவின் ஒன்டாரியோ, கியூபெக் மாகாணங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால், சுமார் 8 லட்சம் மக்கள் மின்சாரம் இன்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிஎன் கோபுரத்தை மின்னல் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!