மக்களே உஷார்..!! தீபாவளிக்கு சொந்த ஊர் பயணம்... ரயில் நிலையத்தில் கூட்டநெரிசலில் சிக்கி 10 பேர் படுகாயம்.. 2 பேர் கவலைக்கிடம்!

 
ரயில்
 

நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டங்கள்  களைக்கட்ட துவங்கியுள்ள நிலையில், பலரும் சொந்த ஊர் நோக்கி குடும்பத்தினருடனும், உறவினர்களுடனும் தீபாவளி கொண்டாட தயாராகி வருகின்றனர். 

இந்நிலையில், மும்பை பந்த்ரா ரயில் நிலையத்தில் உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூருக்கு செல்லும் ரயிலில் அவசர அவசரமாக பயணிகள் முண்டியடித்து ஏற முற்பட்டதில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பயணிகள் காயமடைந்தனர். பலரும் ரயில் நின்றதும் ஒரே நேரத்தில் ஏறி இடம் பிடிக்க முண்டியடித்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் கீழே விழுந்து காயமடைந்தனர்.

ரயில்

உடனடியான பிளாட்பாரத்தில் இருந்த ரயில்வே காவல்துறையினர் பயணிகளை மீட்டு, அருகில் உள்ள பாபா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரில் இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web