நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடல்!! குடிமகன்கள் அதிர்ச்சி!!

 
மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்!! தடுமாறும் குடிமகன்கள் !!

தமிழகம் முழுவதும் 5500 டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவை படிப்படியாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டதை செயல்படுத்தும் வகையில் நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் செயல்படாது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் இனி பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள், குடியிருப்பு பகுதிகளில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன.

சக்கைபோடு போட்ட தீபாவளி சேல்ஸ்!! மண்டலம் வாரியாக டாஸ்மாக் விற்பனை பட்டியல்!!

நாளை ஜூன்22ம் தேதி வியாழக்கிழமை முதல் படிப்படியாக டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் மூடப்படும் என  அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு இல்லத்தரசிகள் , சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் உத்தரவுப்படி  மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியால் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கையில்  500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் விடுமுறை!

அந்த அறிவிப்பின் படி   500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளைக் கண்டறிந்து மூடிட ஏப்ரல் 20ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.  மேற்படி, அரசாணையை செயல்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 500 கடைகளை கண்டறியப்பட்டுள்ளன. அவை தரம் பிரிக்கப்பட்டு நாளை ஜூன் 22,2023 முதல்   மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், மேற்குறிப்பிட்ட 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் நாளை முதல் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.  
 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web