9 கால்பந்து விளையாட்டு திடல்கள் தனியார் வசம் ஒப்படைப்பு?!

 
கால்பந்து

 
சென்னையில் ரிப்பன் மாளிகையில் இன்று  மாதாந்திர மாமன்ற கூட்டம்  நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மொத்தம் 79 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிலும், மிக முக்கியமான தீர்மானமாகப் பார்க்கப்படுவது  சென்னை சைதாப்பேட்டையில் அமைந்துள்ள 9 கால்பந்து திடல்களைத் தனியாரிடம் ஒப்படைக்க இருப்பதாக தெரிகிறது.

அங்குக் கால்பந்து பயிற்சி பெற்று வரும் விளையாட்டு வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அங்கு விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு வரும் கால்பந்து வீரர்கள் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து அந்த கால்பந்து வீரர்கள் “நாங்கள் நீண்ட காலமாக இங்கு தான் கால்பந்து பயிற்சிகள், உடற்பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்.  இந்த திடல்கள் தனியார் மையத்திடம் ஒப்படைக்கப்பட்டால் கால்பந்து வீரர்கள், இளைஞர்கள் என அனைவரும் கட்டணம் கொடுத்தே வர வேண்டிய சூழ்நிலை உருவாகும்.  

அதே போலத் திறமை இருக்கும் ஏழை, எளிய வீரர்களின் விளையாட்டு வாய்ப்பை பறிக்கும் செயல்பாடாக உள்ளதால் இதனைக் கண்டித்து  எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்”, எனக் கூறுகின்றனர். சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 738 பூங்காக்கள், 173 உடற்பயிற்சி கூடங்கள், 220 விளையாட்டுத் திடல்கள் மற்றும் 204 குழந்தைகள் விளையாட்டு திடல்கள் உள்ளன.இந்நிலையில் தான் தற்போது இந்த விளையாட்டு திடல்களைத் தனியார் மையமாக்குவதற்குக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பது  குறிப்பிடத்தக்கது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!