கோர விபத்து!! ஒன்றுடன் ஒன்று மோதிய 40 வாகனங்கள்!! 12 பேர் பலி!! 30 பேர் படுகாயம்!!
நேற்று நவம்பர் 20ம் தேதி மாலை புனே - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி ஒன்று வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் 2 கிமீ தூரத்திற்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதின. இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கி, கடும் சேதம் விளைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து , புனே தீயணைப்பு துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் புனே - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், நவாலே மேம்பாலத்தில் நடந்த கோர விபத்தில் 48 வாகனங்கள் சேதமடைந்துள்ளன. புனே தீயணைப்பு துறை, புனே பெருநகர மண்டல மேம்பாட்டு ஆணையம் இணைந்து சம்பவ இடத்தில், மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த விபத்தால் , சுமார் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 48 வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று அடுத்தடுத்து மோதி கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது.
Horrible Accident at Navale Bridge Pune .... minimum of 20-30 vehicles involved pic.twitter.com/FbReZjzFNJ
— Nikhil Ingulkar (@NikhilIngulkar) November 20, 2022
டேங்கர் லாரியில் திடீரென பிரேக் பிடிக்காததால், முன்னே சென்ற வாகனங்களில் அத்துடன் டேங்கர் லாரியில் நிரப்பப்பட்ட எண்ணெய் சாலையில் சிந்தியில் பின்னால் வந்து கொண்டிருந்த வாகனங்கள் வழுக்கி விபத்து பெரிதாகியுள்ளது. நேற்று இரவு 9 மணிக்கு நடைபெற்ற விபத்தால் சுமார் 2 கி.மீ., நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சமீபகாலமாக நவாலே மேம்பாலம் விபத்துகள் நடப்பது வாடிக்கையாகி வருகிறது. நவம்பர் 18ம் தேதி இதே நவாலே பாலம் அருகே உள்ள வெளிப்புற சுற்றுச்சாலையில், வேகமாக வந்த கார், ஒரு பெண் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் சாலையோர கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருந்த பக்தர்கள் மீதும் லாரி மோதியது. இதுவரை விபத்தில் பலியான 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளபட்டு வருகிறது.
A major accident occurred at Navale bridge on the Pune-Bengaluru highway in Pune in which about 48 vehicles got damaged. Rescue teams from the Pune Fire Brigade and Pune Metropolitan Region Development Authority (PMRDA) have reached the spot: Pune Fire Brigade pic.twitter.com/h5Y5XtxVhW
— ANI (@ANI) November 20, 2022
இந்த கோர விபத்து குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விடுத்த செய்திக்குறிப்பில், "பீகார் மாநிலத்தில் நடந்த சாலை விபத்து மிகுந்த வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் “ என தெரிவித்துள்ளார்.
அதே போல் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், ``பீகார் மாநிலம் வைஷாலியில் நடந்த விபத்து வருத்தம் அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். படுகாயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை அளிகக் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ2 லட்சம் நிவாரணத் தொகை பிரதமர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும். அத்துடன் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50000 நிவாரணத் தொகை வழங்கப்படும்" எனப் பதிவிடப்பட்டுள்ளது.
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
என் குளியலறைக்கு பூட்டு இல்ல!! ஜான்வி ஜாலி ரவுண்ட் அப் !!