தீயாய் பரவுது மெட்ராஸ் ஐ!! என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?!

 
மெட்ராஸ் ஐ

கடந்த 2 ஆண்டுகளாக  கொரோனா காரணமாக பல்வேறு தடுப்பு முறைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. தற்போது தடுப்பூசிகளால்  கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது . தற்போது  கடந்த சில வாரங்களாக  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாரபட்சமின்றி மெட்ராஸ் ஐ என்ற கண்நோய் பரவி வருகிறது.

 இந்த நோய் கண்ணில் கன்சங்டிவா என்ற விழி வெண் படலத்தில் உருவாவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

மெட்ராஸ் ஐ

இது அடினோ வைரஸ் என்ற கிருமியினால் வருகிறது. இந்நிலையில், 'மெட்ராஸ் ஐ' பரவல் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்   மா.சுப்பிரமணியன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து 'மெட்ராஸ் ஐ' தீவிரமாக பரவத் தொடங்கியுள்ளது.

மெட்ராஸ் ஐ பாதித்தவர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவை:

கண்ணில் உறுத்தல், சிவந்த நிறம், அதிக கண்ணீர், வீக்கம் இவையே 'மெட்ராஸ் ஐ'  யின் அறிகுறிகள்

மெட்ராஸ் ஐ வந்தவர்கள் 4 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். 


கண் நோயால் பாதிக்கப்பட்டவர் மொபைல் பார்ப்பதை அறவே  தவிர்க்க வேண்டும். 
 நீர்ச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கண்ணுக்கு நல்ல ஓய்வு கொடுப்பது அவசியம். 
இவைகளை தொடர்ந்து கடைப்பிடித்தாலே விரைவில் குணமடையலாம். 
மெட்ராஸ் ஐ பாதித்தவர்கள் பயன்படுத்திய பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. 
சுயமாக மருந்து எடுத்துக்கொள்ளக்கூடாது
கண்களில் நீர் வடிவது நிற்கும் வரை பள்ளிகள், அலுவலகங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. 
மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் மட்டுமே மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
சுயமருத்துவம் , மருந்தகங்களில்  தாமாக கண்களுக்கு மருந்து வாங்கி விடுதலை அறவே தவிர்க்க வேண்டும். 

மெட்ராஸ் ஐ

டிசம்பர் 2வது வாரத்திற்குள் 'மெட்ராஸ் ஐ'  கட்டுப்படுத்தப்படும். தற்போது  தமிழகத்தில் தினசரி 4,500 பேர் வரை மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மெட்ராஸ் ஐ பரவுவதை கட்டுப்படுத்த தற்காலிக மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம்  தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவர அனைத்து உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் இதுவரை 1.50 லட்சம்  பேருக்கு மெட்ராஸ் ஐ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மெட்ராஸ் ஐ விரைந்து பரவும் தன்மை கொண்டதால் மக்கள் சுயசிகிச்சை எடுத்துக் கொள்ளக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார். 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

என் குளியலறைக்கு பூட்டு இல்ல!! ஜான்வி ஜாலி ரவுண்ட் அப் !!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web