இன்றும், நாளையும் 6 மாவட்ட மக்களே உஷார்!! வீட்டை விட்டு வெளியே வராதீங்க!!

 
மழை

வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்க கூடும். அதன்பிறகு  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் தமிழகத்தில் இன்றும் நாளையும் சென்னை , காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர், ராணிப்பேட்டையில் கனமழை பெய்யலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!! மிக கன மழை எச்சரிக்கை!!
மேலும், தமிழகம், ஆந்திர, இலங்கை, தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும்.இதனால்  மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் இருப்பவர்கள் அருகில் உள்ள துறைமுகங்களுக்கு பாதுகாப்பாக திரும்பவும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாக மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. 

புயல் 
அத்துடன் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் காற்றின் வேகம் திடீரென அதிகரிக்கக்கூடும் இதன் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  7  துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

என் குளியலறைக்கு பூட்டு இல்ல!! ஜான்வி ஜாலி ரவுண்ட் அப் !!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web